உலகம்

சூடானில் பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு- 8 பேர் பலி

Published On 2022-07-01 05:12 GMT   |   Update On 2022-07-01 05:12 GMT
  • சூடானில் கடந்த 2019-ஆம் ஆண்டு உமர் அல் பஷிர் ஆட்சி அகற்றப்பட்டு ராணுவ ஆட்சி அமைந்தது.
  • பொதுமக்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

கெய்ரோ:

சூடானில் கடந்த 2019-ஆம் ஆண்டு உமர் அல் பஷிர் ஆட்சி அகற்றப்பட்டு ராணுவ ஆட்சி அமைந்தது. அன்று முதல் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது.

சூடான் தலைநகர் கார்ட்டமின் இரட்டை நகரமான ஓம்குர் மாரில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

அவர்கள் கையில் அந்தநாட்டு கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்,

அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் ௬ பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் கார்டுமீன் நைல் ஆற்றின் குறுக்கே ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். குழந்தை ஒன்றும் மார்பில் குண்டுபாய்ந்த நிலையில் இறந்து கிடந்தது. இதனால் இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

Tags:    

Similar News