உலகம்

துபாயில் இந்து கோவில் திறப்பு

Published On 2022-10-05 07:02 GMT   |   Update On 2022-10-05 07:02 GMT
  • தினமும் 1,200 பக்தர்கள் வரை வழிபாடு செய்யலாம்.
  • கூட்ட நெரிசலை தவிர்க்க கியூஆர் குறியீடு அடிப்படையில் முன்பதிவு முறையை கோவில் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது. இக்கோவில், ஏற்கனவே உள்ள சிந்திகுரு தர்பார் கோவிலின் விரிவாக்கம் ஆகும்.

ஜெபல் அலி பகுதியில் தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில் புதிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக கோவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 1,200 பக்தர்கள் வரை வழிபாடு செய்யலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க கியூஆர் குறியீடு அடிப்படையில் முன்பதிவு முறையை கோவில் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News