உலகம்

போப் பிரான்சிசுடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் திடீர் சந்திப்பு

Published On 2025-04-10 02:01 IST   |   Update On 2025-04-10 02:01:00 IST
  • ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்ற போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
  • இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தம்பதியினர் இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

ரோம்:

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வாடிகன் சர்ச் திரும்பினார். தற்போது அங்கு முழு ஓய்வு எடுத்து வருகிறார்.

இதற்கிடையே, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணியார் தம்பதி இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வாடிகனில் ஓய்வு எடுத்து வரும் போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் இன்று திடீரென சந்தித்தனர். அப்போது அவரது உடல்நலம் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News