செய்திகள்
எஸ்.கே. சின்ஹா

வங்காளதேசம் முன்னாள் தலைமை நீதிபதிக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2021-11-09 13:55 GMT   |   Update On 2021-11-09 13:55 GMT
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வங்காளதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.கே. சின்ஹாவுக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வங்காளதேச நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா. இவர் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவி வகித்தார். சின்ஹா வங்காளதேச நாட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற முதல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

வங்காளதேச அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், வலுக்கட்டாயமாக தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் மீது பணமோசடி மற்றும் நம்பிக்கை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பண மோசடியில் ஆதாயம் பெற்ற முதல் நபராக சின்ஹா உள்ளதாக டாக்கா சிறப்பு நீதிமன்றம் 11 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
Tags:    

Similar News