செய்திகள்
கொரோனா பரிசோதனை

டெல்டா வகை கொரோனா அச்சுறுத்தல் - தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்

Published On 2021-06-28 00:26 GMT   |   Update On 2021-06-28 01:39 GMT
தென் ஆப்பிரிக்காவில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது. அந்நாட்டில் 5 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டோரியா:

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 28-ம் தேதி முதல் அடுத்த 14 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News