செய்திகள்

பாகிஸ்தானில் புயல், மழை, புழுதிப்புயலுக்கு 25 பேர் பலி

Published On 2019-04-16 14:07 GMT   |   Update On 2019-04-16 14:07 GMT
பாகிஸ்தான் நாடின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தை தாக்கிய புயல், மழை, புழுதிப்புயலுக்கு 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #25killed #Pakistanduststormlash #Pakistanstorm
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாடின் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபர் பகதுங்கவா மாகாணங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் புயல் மற்றும் அசுர வேகத்தில் புழுதிப்புயலும் தாக்கியது.

இதில் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்சார்ந்த விபத்துகளில் இன்றுவரை 25 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.



புயலின் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட கராச்சியில் மீனவர்கள், சிறுமிகள் உள்பட நான்கு பேர் காணாமல் போனதாகவும் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்ன் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #25killed #Pakistanduststormlash #Pakistanstorm
Tags:    

Similar News