செய்திகள்
சூதாட்ட விவகாரத்தில் இலங்கைக்கு உதவுகிறது இந்தியா - ரணதுங்கா
இலங்கை கிரிக்கெட்டில் நிலவி வரும் சூதாட்ட விவகாரம், ஊழல்களை ஒழிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம் என்று அர்ஜூனா ரணதுங்கா கூறியுள்ளார். #Ranatunga
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இலங்கையின் பெட்ரோலியத்துறை மந்திரியுமான அர்ஜூனா ரணதுங்கா கூறியதாவது:-
இலங்கை கிரிக்கெட்டில் நிலவி வரும் சூதாட்ட விவகாரம், முறைகேடு, ஊழல்களை ஒழிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம். சி.பி.ஐ அமைப்பு எங்களுக்கு எல்லா வகையிலும் உதவி அளிக்க இருக்கிறது.
சூதாட்டத்தை ஒழிக்க வேண்டிய விதி முறைகளும் ஏற்படுத்தப்படும். இது தொடர்பான சட்ட வரையறையை உருவாக்கி தர இந்தியா முன் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Ranatunga