செய்திகள்

இந்தியா - இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலை சென்றன

Published On 2018-09-07 11:17 GMT   |   Update On 2018-09-07 11:17 GMT
இந்தியா - இலங்கை கடற்படை வீரர்களுக்கான ஒருவார கூட்டுப்போர் பயிற்சிக்காக இந்தியாவின் 3 போர் கப்பல்கள் திரிகோணமலை சென்றன. #IndianNavalShips #Trincomalee
கொழும்பு:

இந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அவ்வகையில், ஆறாவது ஆண்டாக 7-9-2018 முதல் 13-9-2018 வரை நடபெறும் ஒருவார கூட்டுப் போர் பயிற்சிக்காக இந்திய கடற்படையை சேர்ந்த கிர்ச், சுமித்ரா மற்றும் கோரா டிவ் ஆகிய  3  போர் கப்பல்கள் திரிகோணமலை சென்றடைந்தன. #IndianNavalShips #Trincomalee

Tags:    

Similar News