தமிழ்நாடு செய்திகள்
நெல்லையில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
- நாய் கடித்த காயத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால், உடல்நிலை மோசமாகியுள்ளது.
- சிகிச்சை பலனின்றி ரேபிஸ் பாதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சில நாட்களுக்கு முன் ஐயப்பன் (30) என்ற கட்டட தொழிலாளி நாய் கடித்த நிலையில், காயத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால், உடல்நிலை மோசமாகி நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்