தமிழ்நாடு செய்திகள்

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் 3-வது நாளாக ரசாயன நுரையுடன் வெளியேறும் தண்ணீர்

Published On 2024-12-05 10:33 IST   |   Update On 2024-12-05 10:33:00 IST
  • அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது.
  • ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.

ஓசூர்:

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பலமாகவும், பரவலாகவும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 600 கன அடிநீர் வந்தது. 600 கன அடி நீரும், ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று, விநாடிக்கு 680 கன அடிநீர் வந்தது. அதே அளவு நீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுகள் மழை நீரில் கலந்து, தொடர்ச்சியாக கெலவரப்பள்ளி அணைக்கு வருவதால், அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது. மேலும் இந்த ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.

இதனால், விவசாயிகளும், கிராம மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News