Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்
650 மகளிர்க்கு பனை ஓலை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 80 கோடி மதிப்பிலான பனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை
ஐந்தாண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
2021-22ம் ஆண்டு முதல் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
5 ஆயிரம் புதிய பம்பு செட்கள் 7 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளன.
தக்காளி, வெண்டை, கத்திரிக்காய் சாகுபடி பரப்பளவை 1 லட்சம் ஏக்கரில் விரிவாக்கம் செய்ய 1.68 லட்சம் விவசாயிகளுக்கு மானியம்- அமைச்சர்
8400 ஏக்கரில் முந்திரி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மிளகாய், ஏலக்காய், சாதிக்காய் சாகுபடி 22,950 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
10 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரிப்பு
1320 வேளாண் இயந்திர வாடகை நிலையங்கள் அமைப்பு