தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிப்பு

Published On 2025-08-22 10:03 IST   |   Update On 2025-08-22 10:03:00 IST
  • அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
  • தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக இந்தாண்டில் 5-வது முறையாக அணை நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. அதிகபட்சமாக 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்தது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News