தமிழ்நாடு செய்திகள்

தென்மேற்கு பருவமழை - பாதுகாப்பான விமான சேவை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

Published On 2025-05-21 13:59 IST   |   Update On 2025-05-21 13:59:00 IST
  • தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.
  • விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஆலந்தூர்:

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளவும், குறிப்பாக விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி தீபக் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பாதுகாப்பான விமான சேவை, பயணிகளின் சிரமங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.

Tags:    

Similar News