தமிழ்நாடு செய்திகள்

சீர்காழி சட்டநாதர் கோவிலில் நடந்த சுக்ரவார வழிபாட்டில் ஓ.பி.எஸ் மகன் தரிசனம்

Published On 2025-06-07 14:52 IST   |   Update On 2025-06-07 14:52:00 IST
  • மலைக்கோவிலில் உள்ள சட்டநாதர் சுவாமிக்கு புனுகு சாந்தி நடைபெற்ற வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
  • அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் சட்டநாதர்சுவாமி புனுகு விபூதி, உளுந்து வடை, பயிர் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர வார வழிபாடு பூஜை நடைபெறுவது வழக்கம். நள்ளிரவு வரை தொடரும் இப்பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்து கண்விழித்து சுக்ரவார வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். சட்ட சிக்கல், சத்துருக்களின் தொல்லைகள், பில்லி சூனியம், அச்சம் ஆகியவைகள் நீங்கி ஏராளமான நன்மைகள் உடனடியாக வந்து சேரும் என்பதால் சுக்ரவார வழிபாட்டில் பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற சுக்கிர வார வழிபாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயப்பிரதீப் பங்கேற்று தரிசனம் செய்தார். பலிபீடத்திற்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்து சட்டநாதர் சுவாமிக்கு நடைபெற்ற வழிபாடு, மலைக்கோவிலில் உள்ள சட்டநாதர் சுவாமிக்கு புனுகு சாந்தி நடைபெற்ற வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்று தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் சட்டநாதர்சுவாமி புனுகு விபூதி, உளுந்து வடை, பயிர் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர். 

Tags:    

Similar News