தமிழ்நாடு செய்திகள்

ஆழ்வார்பேட்டையில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

Published On 2025-07-31 11:32 IST   |   Update On 2025-07-31 11:32:00 IST
  • ஆலோசனையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
  • த.வெ.க.வுடன் ஓ.பி.எஸ். தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசித்து வருகிறார்.

த.வெ.க.வுடன் ஓ.பி.எஸ். தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

சென்னையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன் என்று நேற்று ஓ.பி.எஸ். கூறியிருந்த நிலையில் ஆலோசனைக்கு பிறகு கூட்டணி குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News