தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 119.73 அடியாக குறைந்தது

Published On 2025-09-11 11:23 IST   |   Update On 2025-09-11 11:23:00 IST
  • பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
  • மேட்டூர் அணையில் தற்போது 93.04 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

அதன்படி இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.73 அடியாக குறைந்து காணப்பட்டது. மேலும் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 717 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.04 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News