தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாக சரிவு

Published On 2024-11-06 10:58 IST   |   Update On 2024-11-06 10:58:00 IST
  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது.
  • தற்போது அணையில் 74.10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது. கடந்த சில நாட்களாக மழை அதிகமாக இருந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் குறையதொடங்கியது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகளவில் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.92 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 566 கனஅடி தண்ணீர் நேற்று வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 9 ஆயிரத்து 929 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 74.10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News