தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2025-06-22 10:14 IST   |   Update On 2025-06-22 10:14:00 IST
  • கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
  • தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சேலம்:

மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் 5 ஆயிரம், 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 16 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதிகபட்சமாக நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 469 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 628 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று 113.69 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News