தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது- பரிசல் இயக்க அனுமதி

Published On 2024-10-28 11:21 IST   |   Update On 2024-10-28 11:21:00 IST
  • காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • அருவிகளில் குளிக்க தொடர்ந்து 16-வது நாளாக தடை நீடிக்கிறது.

பென்னாகரம்:

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது.

இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து பகுதியில் பெய்த மழை குறைந்தது.

இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அருவிகளில் குளிக்க தொடர்ந்து 16-வது நாளாக தடை நீடிக்கிறது.

இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமல், பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News