ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 18 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டு இருந்தது.
- ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது.
தருமபுரி:
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது காணப்பட்டது. இதனால் அணைகளின் பாதுகாப்பை கருதி இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் அவ்வ பொழுது திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 18 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டு இருந்தது.
தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஆனாலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. மேலும், அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை எதுவுமில்லை.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.