தமிழ்நாடு செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை எச்சரிக்கை

Published On 2025-04-10 10:15 IST   |   Update On 2025-04-10 10:15:00 IST
  • தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது மழை மற்றும் வெயில் அடித்து வருகிறது.
  • மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வசதி பெறுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது மழை மற்றும் வெயில் அடித்து வருகிறது.

இதனால் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News