தமிழ்நாடு செய்திகள்

நெல்லை அருகே விலை இல்லாததால் தாமரை பூக்களை சாலையில் வீசி சென்ற விவசாயிகள்

Published On 2025-09-02 12:53 IST   |   Update On 2025-09-02 12:53:00 IST
  • வைராவி குளம் பகுதியில் தாமரை பூக்கள் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.15-க்கு விற்பனையான தாமரை பூக்கள் தற்போது அவை ரூ.1.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரங்களில் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே வைராவி குளம் பகுதியில் தாமரை பூக்கள் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது.

ஆவணி மாதத்தை முன்னிட்டு சுபமுகூர்த்த நாட்களில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் தற்போது தாமரை பூக்கள் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.15-க்கு விற்பனையான தாமரை பூக்கள் தற்போது அவை ரூ.1.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உரிய விலை இல்லாததால் வைராவிகுளம் பகுதியில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட தாமரை பூக்களை சாலையில் வீசி சென்றனர்.

Tags:    

Similar News