தமிழ்நாடு செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவியை தாக்கிய முன்னாள் காதலன் கைது

Published On 2025-06-28 15:40 IST   |   Update On 2025-06-28 15:40:00 IST
  • இளைஞர் மீது அண்ணா பல்கலை. மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவியை தாக்கிய புகாரில் முன்னாள் காதலனை காவல்துறை கைது செய்துள்ளது.

நடத்தை சரியில்லாததால் மாணவி காதலை துண்டித்த ஆத்திரத்தில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பெண்ணை காதலன் தாக்கியுள்ளார்.

மேலும், நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலரான பொறியியல் பட்டதாரி இளைஞர் மீது அண்ணா பல்கலை. மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News