ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் மனு
- ஜாய் கிரிசில்டா பேசியதால் 15 நாளில் ரூ.12.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
- மாதம்பட்டி பகாசாலா நிறுவனம் அவரை பாதுகாப்பதாக ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்," ஜாய் கிரிசில்டா அவதூறாக பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரங்கராஜ் உடனான தகராறில் அவர் பார்ட்ரனாக உள்ள மாதம்பட்டி பகாசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேசியதாக ஜாய் கிரிசில்டா மீது அந்நிறுவனம் புகார் அளித்துள்ளது.
மாதம்பட்டி பகாசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிசில்டா பேசியதால் 15 நாளில் ரூ.12.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் பார்ட்னராக உள்ள மாதம்பட்டி பகாசாலா நிறுவனம் அவரை பாதுகாப்பதாக ஜாய் கிரிசில்டா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாதம்பட்டி என்று குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.