தமிழ்நாடு செய்திகள்
கார் டயர் வெடித்து விபத்து- 4 பேர் பலி
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் சங்கீதா, சுபா, தனலட்சுமி, ராகவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆயுதப்படை காவலர் மாதவன் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.