தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. பிரமுகர் மர்ம மரணம்- ஆஸ்பத்திரியில் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு

Published On 2024-12-17 13:59 IST   |   Update On 2024-12-17 13:59:00 IST
  • சிலர் திட்டமிட்டு தாக்கியதால் விட்டல் குமார் படுகாயம் ஏற்பட்டு இறந்துள்ளார்.
  • விட்டல் குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் விட்டல் குமார் (வயது 40). பா.ஜ.க. ஆன்மீக பிரிவு மாவட்ட துணை தலைவராக இருந்து வந்தார்.

நேற்று அந்தப் பகுதியில் இவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விட்டல் குமார் இறந்தார்.

அந்த பகுதியை சேர்ந்த சிலர் திட்டமிட்டு தாக்கியதால் விட்டல் குமார் படுகாயம் ஏற்பட்டு இறந்துள்ளார். அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனக்கூறிய அவருடைய குடும்பத்தினர் விட்டல்குமார் உடலை வாங்க மறுத்தனர்.

மேலும் பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

விட்டல் குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

அதுவரை உடலை வாங்க மாட்டோம். போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் குவிப்பு மற்றும் பா.ஜ.க.வினர் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News