தமிழ்நாடு செய்திகள்

வத்தலக்குண்டு அருகே கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி

Published On 2025-08-05 14:51 IST   |   Update On 2025-08-05 14:51:00 IST
  • சிறுவனை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
  • உடலின் பெரும்பாலான பகுதி வெந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 32). இவர் தனது குடும்பத்துடன் ஆடி மாதம் குலதெய்வ வழிபாட்டுக்காக சென்றார். விழாவுக்கு வந்த பக்தர்களுக்காக கோவில் அருகே உணவு தயாரிக்கப்பட்டது.

அங்கு சிவக்குமாரின் 2 வயது மகன் ஸ்ரீதரன் விளையாடிக் கொண்டு இருந்தான். கறிக்குழம்பு தயார் செய்து அதனை பாத்திரத்தில் வைத்து விட்டு அங்கிருந்தவர்கள் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ஸ்ரீதரன் எதிர்பாராதவிதமாக அந்த பாத்திரத்தில் தவறி விழுந்தான். இதில் அவன் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் சிறுவனை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

உடலின் பெரும்பாலான பகுதி வெந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் குலதெய்வ வழிபாட்டுக்கு வந்தவர்கள் மத்தியில் மிகுந்த சோகம் நிலவியது. சிறு அலட்சியம் மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. 

Tags:    

Similar News