தமிழ்நாடு செய்திகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம்

Published On 2025-05-19 20:26 IST   |   Update On 2025-05-19 20:26:00 IST
  • வருகிற 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் உள்ளது.
  • விண்ணப்பம் செய்தவர்களில் 46,691 பேர் மாணவர்கள். 75,959 பேர் மாணவிகள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் .

பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர www.tngasa.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். வருகிற 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் உள்ளது.

இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர் 1,61,324 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 46,691 பேர் மாணவர்கள். 75,959 பேர் மாணவிகள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News