தமிழ்நாடு செய்திகள்

'டீன்ஷூஸ்' காலணி தொழிற்சாலை அமைகிறது- மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2024-11-07 11:56 IST   |   Update On 2024-11-07 11:59:00 IST
  • தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது.
  • பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் சிகாகோ சென்றிருந்த போது அரியலூர் மாவட்டத்தில் 'டீன்ஷூஸ்' நிறுவன காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதை செயல்படுத்துவதற்காக 15-ந் தேதி அரியலூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீன்ஷூஸ் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

ஜெயங்கொண்டம் மகிமைபுரம் பகுதியில் 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் டீன்ஷூஸ் குழுமத்தின் இண்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ.1000 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது.

இந்த தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது. அன்றைய தினம் அரியலூரில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.

பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.

Similar News