தமிழ்நாடு

கைதான வைரமுத்து

வெடி விபத்தில் தொழிலாளி பலி- பட்டாசு கடை உரிமையாளர் கைது

Published On 2023-05-18 05:05 GMT   |   Update On 2023-05-18 05:05 GMT
  • வைரமுத்து கண்டியாபுரம் செல்லும் வழியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
  • விபத்து குறித்து பனையடிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வைரமுத்து(வயது40). இவர் கண்டியாபுரம் செல்லும் வழியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இங்கு நேற்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை.

இந்த விபத்தில் கடையில் இருந்த தொழிலாளி கோட்டைபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பவர் உடல் கருகி பலியானார். மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, வட்டாட்சியர் ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் விபத்து குறித்து பனையடிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் வைரமுத்துவை கைது செய்தனர்.

Tags:    

Similar News