தமிழ்நாடு

தண்ணீர் தட்டுப்பாடு: டாப்சிலிப் முகாமில் இருந்து 3 யானைகள் இடமாற்றம்

Published On 2024-03-30 06:02 GMT   |   Update On 2024-03-30 06:02 GMT
  • டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக முத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன.
  • கடும் வெயில் காரணமாக யானைகளுக்கு போதுமான நீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

வால்பாறை:

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது.

ஆறுகள் அனைத்தும் வறண்டுள்ளதால் போதிய நீர் கிடைக்காமல் வால்பாறை வனத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறத் தொடங்கி உள்ளன.

டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக முத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன.

அப்பகுதியில் கடும் வெயில் காரணமாக யானைகளுக்கு போதுமான நீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கோழிக முத்தி முகாமில் இருந்து வரகலியாறு வழியாக வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிகளுக்கு கலீம், பேவி, காவேரி ஆகிய 3 யானைகள் நேற்று அழைத்து வரப்பட்டன.

டாப்சிலிப் பகுதியில் போதிய நீர் கிடைக்காததால் இந்த மூன்று யானைகள் மானாம்பள்ளி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் இங்கு அமைக்கப்பட்டு உள்ள முகாமில் மூன்று யானைகளும் இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News