தமிழ்நாடு செய்திகள்

முட்செடிகளால் பாதையில் விரிசல்- பூண்டி ஏரி கரைகள் பாதிப்பு

Published On 2023-04-17 12:26 IST   |   Update On 2023-04-17 17:03:00 IST
  • பூண்டி ஏரிக்கரையில் வளர்ந்துள்ள அதிக அளவிலான முட் செடிகளால் ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட தார் சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
  • ஆங்காங்கே கரை நடுவில் பெரிய பெரிய பள்ளமும் உருவாகி உள்ளன.

திருவள்ளூர்:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதி சதுரங்கப்பேட்டை, புல்லரம் பாக்கம், கொழுந்த லூர், கைவண்டூர், பாண்டூர், பட்டரைபெரும்புதுார், அரும்பாக்கம் வரை 12.5 சதுர கி.மீட்டர் பரப்பில் பரந்து விரிந்து உள்ளது. 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். 16 மதகுகள் உள்ளன.

ஏரியை சுற்றிலும், 8 கி.மீ., துாரத்தில், 15 மீட்டர் அகலத்தில் கரை அமைக்கப்பட்டு தார் சாலை போடப்பட்டு உள்ளது. கரைகளை பலப்படுத்துவது, மதகுகளை சரிபார்ப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி வருகிறது.

இந் நிலையில் பூண்டி ஏரிக்கரையில் வளர்ந்துள்ள அதிக அளவிலான முட் செடிகளால் ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட தார் சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஆங்காங்கே கரை நடுவில் பெரிய பெரிய பள்ளமும் உருவாகி உள்ளன.

சில இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்படுகிறது. கரையின் சுவர் இடிந்து உள்ள இடம் வழியாக, அருகில் உள்ள கிராம மக்கள், கால் நடைகளை கொண்டு வந்து, நீர்த்தேக்கத்திற்குள் மேய்ச்சலுக்காக விட்டுச் செல்கின்றனர். இதனால் கரைகள் மேலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே பூண்டி ஏரியைச் சுற்றிலும் சேதமடைந்த கரையை சீரமைத்து, அங்குள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News