தமிழ்நாடு

விருதுநகரில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- 8 பேர் உயிரிழப்பு

Published On 2023-10-17 10:01 GMT   |   Update On 2023-10-17 10:04 GMT
  • சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையிலும் வெடி விபத்து.
  • வெடி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து என தகவல்.

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து நடந்த அறைக்குள் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என சோதனை செய்து வருகி்ன்றனர்.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரும் விரைந்துள்ளனர்.

இதேபோல், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையிலும் இன்று நன்பகல் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வெடி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News