தமிழ்நாடு செய்திகள்

வாலாஜாவில் வந்தே பாரத் ரெயில் மோதி வடமாநில வாலிபர் பலி

Published On 2023-05-17 12:40 IST   |   Update On 2023-05-17 12:40:00 IST
  • கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் பாபா சிந்து மண்டல் மீது மோதியது.
  • காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாபா சிந்து மண்டல் (வயது 41). இவர் திருப்பூரில் கட்டிட வேலை செய்வதற்காக ஹவுரா ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தார்.

அங்கிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருப்பூருக்கு பயணம் செய்தார். ரெயில் வாலாஜா ரெயில் நிலையத்தில் நின்ற போது பாபா சிந்து மண்டல் கீழே இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றவாறு சிறுநீர் கழித்தார்.

அப்போது கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் பாபா சிந்து மண்டல் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News