தமிழ்நாடு

விவசாய பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை.

கடம்பூர் மலை பகுதியில் 6 மாதமாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானை

Published On 2023-07-14 04:31 GMT   |   Update On 2023-07-14 04:31 GMT
  • ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்காடு பகுதியில் விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியது.
  • கடந்த 6 மாதமாக இந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது குடிநீர், உணவு தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக ஒற்றை யானை இரவு நேரங்களில் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதே போல் இன்று அதிகாலை அந்த ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்காடு பகுதியில் விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் யானையை சைரன் ஒலி எழுப்பி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, கடந்த 6 மாதமாக இந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஒற்றை யானையை இங்கிருந்து வேறு இடத்துக்கு வனத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News