தமிழ்நாடு செய்திகள்

ராமநாதபுரம் அருகே கடல் அட்டை கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-12-04 10:59 IST   |   Update On 2022-12-04 10:59:00 IST
  • கடல் அட்டை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.
  • 20 ஆண்டுகளுக்கு பின் கடல் அட்டை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம்:

நிலத்தில் விவசாயிகளின் நண்பனாக மண்புழு உள்ளதைப் போல், கடலில் மீனவர்களுக்கு நண்பனாக கடல் அட்டை விளங்குகிறது. கடல் அட்டை 2001-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் கடல் அட்டை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது மீராசா மகன் ஜாகீர் உசேன். இவர் கடல் அட்டை கடல் வெள்ளரி உள்பட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பிடித்து வந்தார். தொடர் வன உயிரின குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். வனக் குழுவினரின் தீவிர நடவடிக்கையினால் கைது செய்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

பின்னர் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளரான பகான் ஜெகதீஸ் சுதாகர் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ்க்கு பரிந்துரை செய்தார். ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளரின் பரிந்துரையினை ஏற்று கலெக்டர் உத்தரவுப்படி ஜாகிர் உசேனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

20 ஆண்டுகளுக்கு பின் கடல் அட்டை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இச்செய்தியை அறிந்த கடல் அட்டை கடத்தல்காரர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் பெற்றது.

Similar News