தமிழ்நாடு செய்திகள்

பூந்தமல்லியில் சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்- பொதுமக்கள் அவதி

Published On 2023-07-12 14:38 IST   |   Update On 2023-07-12 14:38:00 IST
  • பாரிவாக்கம் இணைப்பு சாலை வழியாக செல்லக்கூடிய கால்வாயில் தண்ணீர் செல்லாத வகையில் மண்ணை கொட்டி மூடப்பட்டுள்ளது.
  • துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பாரிவாக்கம் இணைப்பு சாலையில் பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. மேலும் புதிதாக அமைக்கப்படும் சாலையின் ஓரத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடக்கிறது. இதற்கிடையே பாரிவாக்கம் இணைப்பு சாலை வழியாக செல்லக்கூடிய கால்வாயில் தண்ணீர் செல்லாத வகையில் மண்ணை கொட்டி மூடப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தற்போது கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கி ஆறாய் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கும் போது முறையாக கழிவுநீர் வெளியே செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News