தமிழ்நாடு
மிக அவசிய பயணம் என்றால் மட்டுமே வெளியில் செல்லுங்கள்- போக்குவரத்து போலீஸ் வேண்டுகோள்
- பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
- வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை:
மாண்டஸ் புயலையொட்டி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாலம் சேதம்
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாலம் மாண்டஸ் புயலால் சேதம் அடைந்துள்ளது. ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் சில நாட்களிலேயே சேதம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.