தமிழ்நாடு செய்திகள்

காசிமேட்டில் விசைப்படகுகள் சங்கத்தை கைப்பற்ற 2 தரப்பினர் மோதல்- போராட்டம்

Published On 2023-05-27 15:45 IST   |   Update On 2023-05-27 15:45:00 IST
  • சென்னை காசிமேட்டில் சிங்காரவேலன் விசைப்படகுகள் மீனவர் சங்கம் அமைந்துள்ளது.
  • இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சங்கத்தின் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராயபுரம்:

சென்னை காசிமேட்டில் சிங்காரவேலன் விசைப்படகுகள் மீனவர் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தை ஒரு பிரிவினர் நடத்தி வருகிறார்கள். இந்த சங்கத்தை கைப்பற்ற மற்றொரு தரப்பினர் முயன்றனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சங்கத்தின் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு காசிமேடு மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் குவிந்தனர். போலீஸ் உதவி கமிஷனர்கள் இருதயம், முகமது நாசர் ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சங்கத்தை போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

இந்த விவகாரத்தை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பியுள்ளனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News