தமிழ்நாடு செய்திகள்

மேகதாது அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பதில்

Published On 2022-12-21 11:42 IST   |   Update On 2022-12-21 11:46:00 IST
  • மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, கர்நாடக அரசால் 2019 ஜனவரியில் மத்திய நதிநீர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
  • விரிவான திட்ட அறிக்கையின் நகல்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.

சென்னை:

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? என்று வைகோ எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டூடு அளித்த பதில் வருமாறு:-

மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, கர்நாடக அரசால் 2019 ஜனவரியில் மத்திய நதிநீர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, விரிவான திட்ட அறிக்கையின் நகல்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. காவிரி நீர்மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களின் போது, மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மீதான விவாதம் ஒரு நிகழ்ச்சி நிரலாக சேர்க்கப்பட்டது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இந்த நிகழ்ச்சி நிரல் மீதான விவாதம் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News