தமிழ்நாடு

கோடை விடுமுறைக்கு சுற்றுலா தலங்களுக்கு பயணம் அதிகரிப்பு- விமான கட்டணம் கடும் உயர்வு

Published On 2023-03-24 05:53 GMT   |   Update On 2023-03-24 05:53 GMT
  • புது சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மக்கள் விருப்பம் காட்டி வருகின்றனர்.
  • மொராக்கோ, துருக்கி, எகிப்து, அஸர்பே ஜியான் போன்ற நாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.

சென்னை:

பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விரைவில் தொடங்க உள்ளன. இதையடுத்து கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளி ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட் முன்பதிவு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஸ்ரீலங்கா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு செல்ல முன்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் இந்த நாடுகளில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், பக்ரைன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து வியட்நாம், பாலத்தீவு, கம்போடியா போன்ற நாடுகளுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆனால் சென்னையில் இருந்து இந்த நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாததால், மற்ற மாநிலங்கள் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதலாக விமான கட்டணம் செலவிட வேண்டி உள்ளது.

இந்த சுற்றுலா தலங்களுக்கு எப்போதுமே மக்கள் அதிகமாக சென்று வருவதாலும், இந்த இடங்களுக்கு விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளதாலும் மக்கள் புது இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். தற்போது புது சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மக்கள் விருப்பம் காட்டி வருகின்றனர்.

அதன்படி மொராக்கோ, துருக்கி, எகிப்து, அஸர்பே ஜியான் போன்ற நாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.

இதேபோல் உள்நாட்டிலும் சுற்றுலா செல்வதற்கு விமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு சூடு பிடித்து உள்ளது. மே மாதத்தில் சென்னையில் இருந்து ஸ்ரீ நகர் வழியாக டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மேலும், சென்னையில் இருந்து அந்தமான் செல்ல ரூ. 8,000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்து இருக்கிறது.

இது குறித்து டிராவல் ஏஜென்சிகள் கூறும்போது, தற்பொழுது கோடை காலமான மே மாதத்தில் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர். ஏனென்றால் சுற்றுலா விசா அவர்களுக்கு சரியான இடத்தில் கிடைத்திட வேண்டும்.

உள்நாட்டு சுற்றுலா செல்பவர்களுடைய எண்ணிக்கை ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டும் இதே போல் இருந்தது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கு பயணிகள் அதிகமாக சென்றது குறிப்பிடத்தக்கது என்றனர்.

Tags:    

Similar News