தமிழ்நாடு செய்திகள்

பழவேற்காட்டில் மீன்பிடி படகை திருடி சென்ற பலே திருடர்கள்- மீனவர்கள் அதிர்ச்சி

Published On 2023-02-21 12:10 IST   |   Update On 2023-02-21 12:10:00 IST
  • ருடுபோன படகில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 என்ஜீன்கள், மீன்பிடி உபகரணங்கள் இருந்தன.
  • மோட்டார் சைக்கிள், கார் வரிசையில் தற்போது படகையும் திருடிய பலே திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி:

பழவேற்காடு நடுவூர் மாதா குப்பத்தைச் சேர்ந்தவர் சார்லஸ். இவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் மீன்பி டித்தனர். பின்னர் கரை திரும்பிய அவர்கள் மீன்பிடி படகை பழவேற்காடு மீன் விற்பனை அங்காடி அருகே கடலோர காவல் படை நிலையம் எதிரில் நிறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்த போது நிறுத்தி இருந்த படகு மாயமாகி இருந்தது. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது 4 பேர் கும்பல் படகை இயக்கி திருடி சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் படகின் உரிமையாளர் சார்லஸ் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். திருடுபோன படகில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 என்ஜீன்கள், மீன்பிடி உபகரணங்கள் இருந்தன. மோட்டார் சைக்கிள், கார் வரிசையில் தற்போது படகையும் திருடிய பலே திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News