விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்- 2வது சுற்றில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

Published On 2022-07-30 18:35 IST   |   Update On 2022-07-30 18:37:00 IST
  • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2வது சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகின்றனர்.
  • சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.

3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் காண்கிறார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் விளையாடி வரும் நிலையில், மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றிப் பெற்றுள்ளார்.

மேலும், சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப்பெற்றுள்ளார்.

Tags:    

Similar News