தமிழ்நாடு

குடிநீர் வினியோக கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

Published On 2023-09-10 03:11 GMT   |   Update On 2023-09-10 03:11 GMT
  • குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • நடவடிக்கைகள் அனைத்தையும் வருகிற 30-ந்தேதிக்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

சென்னை:

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 60 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்களை அமைத்து, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டது என மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இத்தகைய வகையில் சிறந்து விளங்கிய நம் மாநிலத்தில், மாசுபாடான நீரை அருந்தியதால் பலர் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற செய்திகள் வருவது வருந்தத்தக்கது.

எனவே, இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, குடிநீர் வினியோகம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வருகிற 30-ந்தேதிக்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

மேலும், இதுதொடர்பான முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான விளைவுகளையும் கண்காணிக்க ஏதுவாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News