தமிழ்நாடு

அண்ணா சாலையில் ஓ.பி.எஸ். வைத்த பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த அ.தி.மு.க. வினர் மறுப்பு

Published On 2023-09-17 10:10 GMT   |   Update On 2023-09-17 10:10 GMT
  • ஓ. பன்னீர்செல்வம் கூறும்போது, பெரியார் எல்லோருக்கும் பொதுவானவர்.
  • இரு தரப்பினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை:

சென்னை அண்ணா சாலையில் பெரியார் பிறந்த நாளையொட்டி இன்று அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் அண்ணா மேம்பாலத்துக்கு கீழே உள்ள பெரியார் சிலைக்கு அருகில் அவரது புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தினர்.

ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி விட்டு சென்ற பின்னர் அங்கு அ.தி.மு.க. வினர் வந்தனர். ஓ.பி.எஸ் அணியினர் வைத்த பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த மறுத்து விட்டனர். இதையடுத்து வேறு ஒரு பெரியார் படத்தை அ.தி.மு.க.வினர் அலங்கரித்து வைத்தனர். இந்த படத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது யாரோ வைத்த புகைப்படத்துக்கு நாங்கள் எப்படி மரியாதை செலுத்த முடியும் என்று தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வம் கூறும்போது, பெரியார் எல்லோருக்கும் பொதுவானவர். இதில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றார். இதன் காரணமாக இரு தரப்பினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News