தமிழ்நாடு

16 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மாநகர காவல்துறையில் பெண் போலீஸ் கமிஷனர் நியமனம்

Published On 2023-02-25 05:38 GMT   |   Update On 2023-02-25 05:38 GMT
  • ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
  • சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்:

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா நேற்று முன்தினம் சென்னை தலைமை இட ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டார். ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

சேலம் மாநகர காவல்துறையில் முதல் கமிஷனரான ஜெகநாதன் தொடங்கி அடுத்தடுத்து ஆண்களே கமிஷனராக நியமிக்கப்பட்டனர். 2006-ல் முதல் பெண் கமிஷனராக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு பின், 13 ஆண்கள் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் சேலம் மாநகர போலீசில், 2-ம் முறையாக, 16 ஆண்டுகளுக்கு பிறகு, ஆவடி போக்குவரத்து, தலைமை இட கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News