தமிழ்நாடு

சென்னை விமானநிலையத்தில் 43 சுங்கத்துறை அதிகாரிகள் இடமாற்றம்

Published On 2022-07-04 07:01 GMT   |   Update On 2022-07-04 07:02 GMT
  • சுங்கத்துறை முதன்மை ஆணையா் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
  • 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையம், துறைமுகம், சரக்குப்பிரிவான காா்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், சுங்கத்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என்று பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால், இடம் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவில், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 35 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதைப்போல் சுங்கத்துறை முதன்மை ஆணையா் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா். மொத்தம் 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 30 பேர் உதவி ஆணையர்கள், 13 பேர் துணை ஆணையர்கள் ஆவர்.

இவர்கள் துறைமுகத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்தில் இருந்து துறைமுகம் மற்றும் கார்கோ பகுதிகளுக்கும், அதைப்போல் கார்கோவில் ஏற்றுமதி பிரிவில் பணியில் இப்பவா்கள், இறக்குமதி பகுதிக்கும், இறக்குமதி பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுமதி பகுதிக்கும், சிலர் விமான நிலைய கொரியர் அலுவலகம், போதை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்குப் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி சுங்க அதிகாரிகள் கூறும்போது, இது வழக்கமாக நடக்கும் பொது இடமாற்றம் தான். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றுவதை தவிா்ப்பதற்காக, நிர்வாக காரணங்களுக்காக இந்த இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News