தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் நிபந்தனையுடன் விடுதலை

Published On 2023-11-08 08:51 GMT   |   Update On 2023-11-08 08:51 GMT
  • கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்ட 26 பேர் இன்று 3-வது முறையாக ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
  • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேர் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் சில நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் கடலுக்கு சென்ற மீனவர்கள் 64 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்ட 26 பேர் இன்று 3-வது முறையாக ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 22 மீனவர்களுக்கு வருகிற 15-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். 4 மீனவர்களை மட்டும் நீதிபதி விடுதலை செய்தார்.

அப்போது மீண்டும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேர் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் சில நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News