தமிழ்நாடு

முன்கூட்டியே வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்... தேதியை அறிவித்தது தேர்வுத்துறை

Published On 2022-06-24 14:52 GMT   |   Update On 2022-06-24 14:52 GMT
  • ஜூலை 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது
  • தேர்வு முடிவுகளை http://dge.tn.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம்

சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது. சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. http://dge.tn.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளங்களில் காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News