தமிழ்நாடு செய்திகள்

நெல்லை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்- ஒருவருக்கு கத்திக்குத்து

Published On 2022-12-06 13:46 IST   |   Update On 2022-12-06 13:46:00 IST
  • பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
  • மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இன்று பள்ளியில் இடைவேளையின்போது மாணவர்கள் சாப்பிட்டு விட்டு கை கழுவி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது மோதலாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த மாணவர் ஒருவர் சக மாணவரை கத்தியால் குத்தினார். இதனால் அந்த மாணவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று காயம்பட்ட மாணவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News